Wednesday, October 15, 2008

திருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

திருப்பூரில் பெரியார், அண்ணா சிலைகளை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம் அறிவித்த அக்.5 ஆம் தேதியன்று பெரியார் கைத் தடியுடன் திருப்பூர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மதவெறி சக்திகளை எதிர்கொள்ள ஊர்வலமாகப் புறப் பட்டனர்.

காவல்துறை, கழகத் தோழர்கள் 90 பேரை கைது செய்து, திருமண மண்ட பத்தில் வைத்தது. கழக செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை யில் மாவட்ட தலைவர் துரைசாமி முன்னிலையில் போராட்டம் நடந்தது. திருமண மண்டபத்தில் வைக்கப்பட் டிருந்த தோழர்களை பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் சந்தித்துப் பேசினார்.


திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராசு திருமண மண்டபம் வந்து தோழர்களைப் பாராட்டிப் பேசி னார். பா.ம.க. பொறுப்பாளர்களும் தோழர் களை நேரில் சந்தித்து பாராட்டினர்.ஒரே நாளில் 90 தோழர்களை திரட்டி, எதிர் போராட்டம் நடத்திய கழகத்தை முற்போக்கு அமைப்பினர் பலரும் பாராட்டினர்.

No comments: